நம்ம நாட்டில பாம்புக்கு பால் ஊத்துவாய்ங்க ஏன் என்றால் பக்தி எண்ணு சொல்லுவாய்ங்க ஆனா அது இப்போ தலைகீழா மாறிபோச்சே ம்ம்ம்ம். விசியத்த பார்க்கலாம் நம்ம நாட்டில் முட்டைடையும், பாலையும் வைத்து பாம்பினை வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆனால் விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயம் என்னவென்றால் முட்டையையும், பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?
ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு. மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது.
ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.
பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.
பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால், முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது. ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இந்த காரணத்தையே அறிவியல் ரீதியான கருத்தாக நமக்கு முன்வைக்கின்றார்கள்.
ஆனால் இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே மக்கள் பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

0 comments:
Post a Comment