பல நாட்களுக்கு பிறகு இந்த வலைப்பதிவு பக்கம் வந்திருக்கிறன் காரணம் எல்லோருமே சொல்லுற  மாதிரி  நானும் கொஞ்சம் விசியான பையந்தாங்க சரி இன்றைய பதிவுல கடன் தொல்லைய குறிப்பிடலாம் என நினைக்கிறன் கடன் கடன்காரன் அப்படி என்று சொன்னாலே அனைவருக்கும் அடி வயிற்றில ஒரு இடி இடிக்கும் என்ன உங்களுக்கு தானே ஐயோ டென்ஷன் ஆகவேணாம் சும்மா சொன்னேங்க

இந்த  கடன் தொல்லையால  பல பேர்  சிக்குமுக்கு பட்டு  பயந்து நடுங்கிரவன்க் இருக்காங்க இல்லையா . அப்படி இருக்கிறவங்களுக்கு இதிலிருந்து விடுபட ஒரு நல்ல வழி இருக்கு  அப்படி எண்டா நம்ம வலைப்பக்கம் எங்கடா எங்கடா என்று எல்லாருமே கண்ண பிதிக்கிகிட்டு வந்திடுவாய்ங்க எல்லாருமே அதனால அந்த ஐடியவ சொல்லலைங்க

நம்ம  நாட்டு பக்கம் இந்த கடன்ல  பட்டிருக்கவங்க அதிகம். அதுவும் சும்மா இல்ல லேட்சக்கனக்கான கடன்கள் இது இப்படி, ஏன் இந்த கடன்  அப்படி என்று பார்த்தால் முக்கியாம நம்ம பாழாப்போன சனங்களுடைய ஆசைதான் . நம்ம சனங்கலுட்ட விரலுக்கு ஏத்த வீங்கம் வேணும் இப்போதான் நம்ம நாட்டுல ஆயிரம் நிறுவனங்களும்  வங்கிகளும்  இப்பதான் கடன் முறைகளை வழங்குதே

அந்த  நிறுவனக்களுட்ட காச எடுத்து ஆடம்பர வீடு பொருட்கள்  எப்படி ஏகப்பட்ட சாமான்கள் அதுமட்டுமில்ல மற்றவன் அப்படி இருக்கானே நம்மளும் அது வாங்கணும் இத வாங்கணும் அப்படி என்கிற ஆசை அவன் மோட்டார் வாகனத்தில போனா அத விட பெரிய  வாகனத்தில போகணும் இப்படி பல ஆசைகள் நம்ம ஒவ்வொருமனிதனுடைய  மனசிலையும் குரங்கு பிடியா பிடிச்சிருக்கு

அது மட்டுமல்ல  நமக்கு தெரிஞ்ச வங்க  சில பேர் வேறு விதமா  இப்படித்தாங்க மாட்டிக்கிட்டாங்க ஒரு நிறுவனம்  சில பேரை வேலைக்கு எடுத்து கிராம மக்களுட்ட கடன கொடுத்து  கிழமை அடிப்படியில் அத வாங்கிற வேலைய  அவங்கட்ட கொடுத்தது.

 நம்ம மக்களும் நல்லவங்க அவங்க அத சரியாத்தான் கட்டிருக்காங்க ஆனா  வேலைக்கு சேர்ந்தவங்க அந்த காச எடுத்து  சும்மா சின்ன சின்ன செலவுகள  கொஞ்சம் தானே எடுத்திருக்கிறோம் போட்டு கட்டலாம்  அப்படி என்று இவங்களும் எடுத்து விளையாடிர்றாங்க  அப்புறம் தெரிஞ்சது  அது பிரட்சன வரும்போதுதான் தெரிஞ்சது பெரிய தொகை  பணத்தையும் பொசுக்கேன்னு போயிற்றே என்று இதத்தான் சொல்லுவாங்க சிறு துளி பெரு வெள்ளம் என்று.

இப்போ  காசு கொடுத்தவங்களும் மாட்டி வேலை செய்தவங்களும் மாட்டி இப்போ பொலிஸ், கோட் என்று அனைவருக்கும் பிரட்சனதான். அதுமட்டுமில்ல  இப்படியான சம்பவங்ககாளால பரிதாவபமானபலர்  தவறான முடிவுகளை எடுத்துஉயிரை விடுகின்ற சம்பவங்கள்  இடம்பெற்று வருகின்றது. அது மட்டுமில்ல  தங்களது வீடு காணி களை விற்று  இருக்க கூட இடம் இல்லாம இருக்கிறாங்க அது மட்டுமல்ல அண்மையில் ஒரு பத்திரிகையில் கூட ஒரு செய்தி வாசித்திருந்தன் இலங்கையின் மட்டக்களப்பு பிரதேசத்தில் கடன் தொல்லையால சாகிறவங்க  அதிகரித்து வாரதாக.
 
இந்த கடன்களை கட்ட வட்டிக்கு வாங்கி  கடன்க் கட்டினா வட்டி குட்டி எல்லாம் சேர்த்து அத விட பல மடங்கு  கடனா வந்திடுது .இப்படி பலர் கடன் தொல்லையில மாட்டிக்கிட்டு முளிக்காங்க அதிகமான கடன்களுக்கு முகம் கொடுக்க முடியாதவர்கள் சாவுதான் சரியான வழி என்று தேர்ந்து எடுக்காங்க
 
இத விட அதிகமா ஆசைப்படாம  நம்மகிட்ட இப்போ  நல்ல பணம் வருதோ அப்ப நம்ம ஆசைகளை நிறைவு செய்திட்டு  சந்தோசமா இருக்குலாமுல  அத விட்டுட்டு கடன பட்டு அவனுக்கு பயந்து இதல்லாம் சரியே வராதுங்க நீங்களாவது திருந்துங்கப்பா

கடனில்லா  வாழ்வுண்டு  but கடனை உண்டால் சாவுண்டு
 

1 comments:

  1. தற்கால சூழலுக்குத் தேவையான
    அருமையான பதிவு
    குறிப்பாக இறுதி மொழி அருமை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

 
Top